Tuesday, May 4, 2010

ஒன்று : அறிமுகம்

1, உலகிற்கு அடிப்படையாகவும் அனைத்து உயிர்களையும் படைத்து, காத்து, ஒடுக்கி, மீண்டும் வெளிப்படுத்தும் அந்த கருணாகார பேரறிவு, மனிதன் தன் பூரணத்துவத்தை அடைய, அனைத்து வகையிலும் தடையாக உள்ள இந்த 'தன்முனைப்பை' ஏன் மனிதனுக்கு வழங்கியது?
2,மனிதனுக்கு மட்டுமல்ல, அனைத்துயிருக்குமே( தாவர உயிரி முதல் மனிதன் ஈறாக) தன்முனைப்பை வழங்கியுள்ளது தெரிகிறது.ஒரு உயிர் தன் பூரணத்துவத்தை அடைய தடையாக உள்ள இந்த தன்முனைப்பை , அந்த முற்றும், முழுமையான,பரிபூர்ண பேரறிவு ஏன் சகல உயிர்களுக்கும் இதை வழங்கியுள்ளது?
இந்த கேள்வி ஆன்மீக உணர்வுடைய அனைவருக்குமே தோன்றுகிறது.
இந்த தன்முனைப்பு வேர் விட்டு வளர்ந்திருப்பது அந்தந்த உயிரின் கர்மாவில். கர்மாவிலிருந்தே தன்முனைப்பு எழுகிறது. இந்த தன்முனைப்பே தலைமுறை, தலைமுறையாக ('தொடர்ந்து உயிர் வாழ்தல்' எனும் தன் முனைப்பின் தொழிலை நடத்தி ,
தான் வாழவேண்டும் என்ற ஆர்வம் முயற்சியுடன் இருக்கிறது. சுற்றுப்புறத்தை கவனத்துடன் ஆராய்ந்து உணவு தேடுகிறது. வேண்டாததை விலக்குகிறது. சூழ்நிலைக்கேற்ப தக அமைத்து கொள்ளுவதற்கு ஏற்ற இணக்கமும், பாரம்பரிய குணங்களை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ளும் ஒழுங்கும்,
)சுற்றுப்புற சூழலுக்கு ஏற்ப தன் இனம் தொடர, தனது தகவமைப்பையும் தேவைக்கேற்ப மாற்றிக்கொள்கிறது கண்கூடு. இந்த செயல்பாட்டை அனைத்து உயிரினங்களிலும் நாம் காண்கிறோம். ---ஒரு உயிரினம் தொடந்து அதன் உச்சநிலை பரிணாமத்தை நோக்கி வலிமையோடு
உயிர்ப்புடன் தொடர வேண்டி அந்த உயிரினத்துக்கு தன்முனைப்பை வழங்கியுள்ளது அந்த பேரறிவு.---( இதன் விளைவாகவே உயிரினத்தில் உற்பத்தி ஆகிறது கர்மா)தன்முனைப்பே கர்மா, கர்மாவே தன்முனைப்பு ஒரு நாணயத்தின் இரண்டு பக்கம்போல!
உயிரினம் தொடர்ந்து வளர்ச்சி படியில் பரிணாமமுற்று மனித உயிராக உயர்நிலை அடைகிறது. மனிதன் தொடர்ந்து தன் இனம் உயிர்வாழ அனைத்து தகவமைப்பிலும் தன்னிறைவு அடைந்த பின் தனது தன்முனைப்பை படிப்படியாக குறைத்துக்கொண்டு வந்து, அது வேர்விட்டு ( சல்லி வேர்கள் ஏராளம்,ஏராளம்.) செழித்து வளர்ந்துள்ள இந்த கர்மாவை திரும்பி பார்த்து ..................-

No comments:

Post a Comment