Tuesday, May 4, 2010

மூன்று : சமண தத்துவம்.


சமண தத்துவம் சில வகையான அடிப்படை கொள்கைகளை கொண்டிருக்கிறது.
1, ஆத்மா
2, ஆத்ம சடப்பொருள்.
3, ஆத்மாவில் கர்மா புகுதல்.
4, கர்மா புகுவதை நிறுத்துதல்.
5, தவம் மற்றும் தியானம் மூலம் கர்மாவை விளக்குதல்.
6, பேரறிவைப்பெற்று விடுதலையடைதல்.
நான்கு வகையான நிலைகளில் ஆன்மாக்கள் பிரபஞ்சத்தில் உள்ளதாக கூறப்படுகிறது.
1, நரகத்தில் உள்ளவை,
2, தாவர இனங்கள் மற்றும் விலங்குகள்.
3, நன்மை தீமையை வேறு படுத்தி அறியும் ஆற்றல் பெற்ற மனிதர்கள்.
4, நற்செயலால் தேவர்களாகி அதன் பயனை அனுபவிப்பவர்கள். ( பிறகு அது தீர்ந்த பிறகு பூமிக்கு மனிதர்களாக திரும்புதல்)
அறிவை பெறுவதற்கு ஐந்து வாயில்களை விளக்குகிறது.
1, மதி ஞானம்.
2, சுருதி ஞானம்.
3, அவதி ஞானம்.
4, மன பார்யாய ஞானம்.
5, கேவல ஞானம். ( இதில் கேவல ஞானம் உண்மையை அறியும் வாய்ப்பை அளிக்கிறது.)

குறிப்பு 1 : கர்ம விதி துல்லியமாக இயங்குவதை பிரபஞ்ச நியதி கொண்டுள்ளது என்று சமணம் கூறுகிறது.

குறிப்பு 2 : சமண சமயம் பிரபஞ்ச படைப்பை இறைவன் என்ற சொல் மூலம் விளக்கவில்லை. மாறாக, கண்ணுக்கு புலனாகாத நுட்பமான சாரம் ஒன்று பிரபஞ்சம் முழுவதும் பரவி நிர்வகிக்கிறது என்று விளக்கப்படுகிறது.

குறிப்பு 3 : ஜீவன் முக்தர்கள் தூல உடலில் நீடித்து உலகியல் வாழ்க்கையில் நீடிக்கும் ஒவ்வொரு நாளும் கர்மங்கள் மீண்டும் அவர்கள் அறியாமலேயே சேர வாய்ப்புண்டு.

No comments:

Post a Comment